மனிதமிருகம்

வருடந்தோரும் திருவிழாவுக்கு செல்லும்போதெல்லாம் என்னை ஆச்சர்யப்படவைக்கும் நிகழ்வாக கிடா பலியிடுதல் மற்றும் இரத்தம் குடித்தலும் இருக்கும். இந்நிகழ்வை பலமுறை புகைப்படம் எடுக்க நினைத்து முடியாமல் போனது. இந்தமுறை படம் பிடித்தாகிவிட்டது.

இவர் பெயர் சங்கர் எனக்கு தெரிந்து 12 வருடங்களாக இவர் காளியாக சாமியாடி வருகிறார், சற்றும் நினைத்து பார்க்க முடியாத செயல்களை செய்வது இவருடைய special எல்லோரும் தீ மிதிக்க இவர் ஒருமுறை தீயில் உருண்டு உடம்பெல்லாம் புண்ணாகியது. இவன் மனிதனா என்ற திகைக்க வைத்த ஒரு நிகழ்வு இங்கு புகைப்படமாக.1. பலிகிடா.

2. கிடா வெட்டப்பட்டவுடன் பாய்ந்து இரத்தம் குடிக்கும் காட்சி



3. முகத்தில் இரத்தம் தெரிக்க , கிடா மார்பில் உதைக்க பற்களால் தூக்கி கோயிலை சுற்றி வரும் போது.



4. முகத்தில் இரத்தம் தெரிக்க மயங்கி விழும் முன்னர்.

0 comments: