த வெ உ புகைப்படப்போட்டி. புகைப்படம் உருவான கதை.

முதலில் போட்டியை அறிவித்த சர்வேசன் அவர்களுக்கு நன்றி. வெற்றி பெற்ற ,நெல்லை சிவா, பெருசு மற்றும் அபர்ணா அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

புகைப்படம் எடுக்க கடைசி தினத்தன்று தான் அதைப்பற்றி தீவிரமாக யோசித்தேன், வெகு எளிதாகவே இந்த யோசனை சிக்கியது.
ஆணால் புகைப்படம் எடுப்பதில் வெகு சிரமப்பட்டேன். முதலில் முயற்சித்தபோது காய்கறிகள் தண்ணீரில் அமிழாமல் மிதந்தன. பிண்ணர் உருளையை வெட்டி , வெங்காயத்தை மிதக்க விட்டு, அதன் மேல் தக்காளியை மேலிருந்து எறிந்து என சில சோதனை(!)க்கிளிக்குகள் முடிந்தபின் லைட்டிங் பற்றி யோசித்து ஜன்னல் வெளிச்சத்தில் சில கிளிக்குகள்.

மீண்டும் திருப்தியில்லாமல் out door lighting சில கிளிக்குகள்.



Background appeal இல்லாமல் போனதால் என்னுடய நீல நிற சட்டையை பின்புறம் வைத்து சில கிளிக்குகள். ஒரு வழியாக முடித்த பின்னர் சிறந்ததாகப்பட்ட இரு படங்களை தேர்வு செய்து போட்டிக்கு கடைசி சில மணி நேரங்களில் அனுப்பிவைத்தால் அங்க வச்சாங்கையா........... ஆப்பு.






படம் நல்லாதான் இருக்கு ஆணால் போட்டி விதிமுறைகளின் படி தவெஉ தவிற எதுவும் இருக்கக்கூடாது ஆகையால் போட்டியில் சேர்க்க இயலாது - என்று திரு. சர்வேசன் பதில் மெயில் அனுப்பினார். ரொம்ப பீல் ஆயிட்டேன். சரி என்ன பன்றது சில மணி நேரங்களில் புதுசா எதுவும் நமக்கு எட்டாது அப்படின்னு முடிவுகட்டி எடுத்த படங்களை என்ன செய்யலாம்னு சோகமா பார்த்துகிட்டு இருந்தேன். சட்டுனு ஒரு யோசனை மின்னல் மாதிறி, இருக்கிற படதிலே crop பண்ணி கிளாஸை எடுத்திட்டா என்ன. வேகமா Crop பண்ணி அனுப்பி வெச்சேன். இந்த முறை "தொடர் முயற்சிகளின் பலனால் உங்கள் புகைப்படம் போட்டியில் சேர்க்கப்பட்டுள்ளது" அப்படின்னு பதில் மெயில் வந்தது. அப்பாடானு முதல் பரிசு கிடைச்ச மாதிரி ஜாலியா தூங்க போயிட்டேன். இதுதாங்க நம்ம படக்கதை.


அப்புறம் போட்டியில நம்ம ஓட்டு I_க்கு போட்டிருந்தேன் அதிலே லைட்டிங் நல்ல இருந்தது.



வாக்களித்த எல்லோருக்கும் , குறிப்பிட்டு எழுதியிருந்த ஓசை செல்லா, சர்வேசன் அவர்களுக்கும் மற்றும் உள்ள நம்ம உறவினர் எல்லோருக்கும்........ ரொம்ப நன்றிகன்னா....

Links

Surveyசன் -ஆக்கியவன் அல்ல அளப்பவன். Free Surveys!: த.வெ.உ புகைப்படப் போட்டி முடிவுகள்

15 comments:

said...

நல்லா இருக்கு கதை.
இருந்ததுல ரொம்ம்ப பிடிச்சது உங்க த.வெ.உ புகைப்படம் தான். வித்தியாசமான முயற்சி மற்றும் கவனத்தை கவரும் அதன் பின்பக்க கலர் என்று சிறந்த புகைப்படமாக தேர்வு செய்யப்படும் என்று முதலில் தோன்றிய [பொறாமைப் பட வைத்த] படம் உங்களோடது தான். :-)

said...

அப்புறம் எனக்கு ஓட்டு போட்டிருந்ததாக எழுதி இருக்கீங்க எவ்வளவு நல்லவங்க நீங்க.நன்றிங்க.

said...

என்ன நான் ரெண்டு பின்னூட்டம் போட்டேனே வரலையா. அப்புறம் இன்னும் மறுமொழி திரட்டப்படுவதில்லை போல தெரிகிறது.
தமிழ் மணத்திற்கு தெரியப்படுத்திவிட்டீர்களா?

said...

//நல்லா இருக்கு கதை.
இருந்ததுல ரொம்ம்ப பிடிச்சது உங்க த.வெ.உ புகைப்படம் தான். வித்தியாசமான முயற்சி மற்றும் கவனத்தை கவரும் அதன் பின்பக்க கலர் என்று சிறந்த புகைப்படமாக தேர்வு செய்யப்படும் என்று முதலில் தோன்றிய [பொறாமைப் பட வைத்த] படம் உங்களோடது தான். :-) //



பாரட்டுக்களுக்கு நன்றி லட்சுமி . உங்கள் படமும் அதுகுறித்த கட்டுறையும் நல்லா இருந்தது.பாரட்டுக்களுக்கு நன்றி லட்சுமி . உங்கள் படமும் அதுகுறித்த கட்டுறையும் நல்லா இருந்தது.

//அப்புறம் எனக்கு ஓட்டு போட்டிருந்ததாக எழுதி இருக்கீங்க எவ்வளவு நல்லவங்க நீங்க.நன்றிங்க.

//

என்னது உள்குத்து மாதிரி இருக்கு.அட உண்மையதாங்க சொல்றேன்.

said...

அருமையான பதிவு :)

அந்த முழு படமும் போட்டியில் போடாததர்க்கு சாரி. போட்டிருந்தா கண்டிப்பா அதுக்கு முதலிடமும், எனக்கு சில தர்ம அடிகளும் கிடைத்திருக்கும். :)

:)

இந்த பக்கத்துக்கு ஒரு லிங்க் கொடுத்திடுங்களேன். நன்றி.
http://surveysan.blogspot.com/2007/02/blog-post_18.html


போட்டி முடுவுகள் பக்கத்துக்கு ஒரு லிங்க் போட்டுடுங்க சார் - http://surveysan.blogspot.com/2007/02/blog-post_18.html

said...

//அருமையான பதிவு :)

அந்த முழு படமும் போட்டியில் போடாததர்க்கு சாரி. போட்டிருந்தா கண்டிப்பா அதுக்கு முதலிடமும், எனக்கு சில தர்ம அடிகளும் கிடைத்திருக்கும். :)//

நன்றி சர்வேசன் நீங்க படத்தை போட்டிக்கு எடுத்துகிட்டதே பெரிய விஷயம்தான் எதுக்கு சாரியெல்லாம். நீங்க ரொம்ப கடுமையான நடுவர்தான்.

said...

தக்காளி யாரு தூக்கி போட்டா? யாரு க்ளிக்கினா?

said...

//தக்காளி யாரு தூக்கி போட்டா? யாரு க்ளிக்கினா?//

என்னோட நண்பன் மூர்த்தி தூக்கி போட. நான் க்ளிக்கினேன். கிட்டதட்ட 15 முறைக்கும் மேல் ரொம்ப சலிச்சுகிட்டான்.

said...

ஓ.கே. மூர்த்திக்கு நன்றி :)

said...

அந்த நீலக்கலர் சட்டையா? சூப்பருங்க, நானென்னவோ ஏதோ 'மை' விட்டுருந்தீங்களோன்னு நினைச்சேன். நல்லாயிருந்தது உங்க பதிவு.

said...

thanks shiva.

said...

சோதனைடா சாமி

said...

என்னுடைய பதிவைப்பாருங்கள்.
உங்களுக்கு டேக் செய்து இருக்கிறேன்.
உங்களைப்பற்றிய வயர்டு குணங்களை
எழுதுங்கள்.நன்றி.

said...

என்னையும் வியர்டு எழுத கேட்டாச்சா நாண் கவணிக்கவில்லை கொஞ்சம் அசட்டையாக இருந்திட்டேன் மண்ணிக்கவும்.

said...

கொஞ்சம் இல்லீங்க ரொம்ப அதிகமான அசட்டை..பின்னூட்டம் வந்தா மெயில்ல காண்பிக்காதா ?
அப்புறம் பாருங்க சின்ன ன வுக்கெல்லாம் பெரிய ண போட்டு வேற உங்க அசட்டையக் காமிக்கறீங்க..